32. அருள்மிகு நந்தாவிளக்குப் பெருமாள் கோயில்
மூலவர் நந்தாவிளக்குப் பெருமாள்
உத்ஸவர் நாராயணன்
தாயார் புண்டரீகவல்லி
திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் இந்திர புஷ்கரணி
விமானம் பிரணவ விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருமணிமாடக்கோயில், தமிழ்நாடு
வழிகாட்டி திருநாங்கூர் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. சீர்காழியில் இருந்து திருவெண்காட்டிற்கு செல்லும் சாலையில் சென்று வலதுபுறம் திரும்ப வேண்டும். சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. சீர்காழி இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Manimadam Gopuram Manimadam Moolavarசிவபெருமான் தனது ஏற்படட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட 'ஏகாதச ருத்ர' யாகம் ஒன்றை நடத்தினார். பூர்ணாஹுதி சமயத்தில் மகாவிஷ்ணு பிரம்மாதி தேவர்களுடன் ஸேவை சாதித்தார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க, விஷ்ணு பதினோரு ரூபத்துடன், ருத்திரனுடன் நித்யவாஸம் செய்யும் ஸ்தலம்தான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். இவை மொத்தம் 11 கோயில்கள்.

மூலவர் 'நந்தாவிளக்குப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் நாராயணன். தாயார் 'புண்டரீகவல்லித் தாயார்' என்று வணங்கப்படுகின்றார். இந்திரன், ஏகாதச ருத்ரர்களுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும். 11 பெருமாள்களும் இங்குதான் ஒன்றாகக் காட்சித் தருவார்கள்.

திருமணிமாடக் கோயில், திருஅரிமேய விண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருத்தெற்றியம்பலம், ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் ஒரே தெருவில் உள்ளன.

திருமங்கையாழ்வார் 12 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணிமுதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com